December 8, 2020

 Poetry in translation series

HOLES_ARE_NOT_FORMED_IN_THE_GREY_COLOURED_BLANKET_AT_ALL

 

At some corner

of this world,

a person began to weave

a grey coloured blanket

with his right hand only.

Covering  towns and cities

quickly in one day,

the blanket immersed people

in a deep sleep like

stupor.

 

He stashed the Sun

who comes holding

the lamp to awaken

from slumber

on the slopes

of the western hill,

entered homes

and appropriated

all that accumulated by people

for himself.

His faithful dog

scoured the heads

and sucked the brains

of those asleep.

 

Grey colour

did not appear

in the dreams

of the long sleep.

It was all colourful

with blue and green,

bright red

and eye-catching yellow.

With green fields soaked in honey,

rivers with springs of milk,

dance of women

and laughter of children,

it was happiness everywhere

 

In place of the Sun

that disappeared,

a big circular lamp

that doesn't singe people

and evaporate rivers

showered light

with new shimmer.

An ecstatic life

untouched by

the fury of a cyclone

or flooding from rain.

 

On a later date,

after eons passed,

when the confined Sun shifted

to the sea of the East,

rose in the sky

and tried to push rays

through the tiny holes

in the grey blanket,

the sight of the people

who woke up slowly

did not go beyond

the blanket at all.

 

After sewing the holes

in the grey coloured blanket

with blunt needles,

they entered

the warm world of sleep,

rushed to the very same juncture

they had left

and started dreaming again.

 

 

 

சாம்பல் நிறப் போர்வையில் பொத்தல்கள் ஏற்படுவதே இல்லை

-----------------------------------------------

 

 

இந்த உலகின்

ஏதோ ஒரு மூலையில்

வெறுமையின் சாம்பல் நிறப்

போர்வை ஒன்றைத் 

தன் வலது கையால் மட்டும்

நெய்யத் தொடங்கினான் ஒருவன்.

சட்டென ஒரே நாளில் 

ஊர்களையும் 

நகரங்களையும் போர்த்தி 

மக்களை ஆழ்ந்த உறக்கம்போன்ற

மயக்கம் ஒன்றில் 

ஆழ்த்தியது போர்வை.

 

  

உறக்கம் விழிக்க 

விளக்கேந்தி வரும் 

சூரியனையும் 

மேற்கு மலையின் 

சரிவுகளில் பதுக்கி

வீடுகளுக்குள் புகுந்து

மக்கள் சேர்த்து வைத்ததை எல்லாம்

தன் வசப்படுத்திக் கொண்டான்.

அவனுடைய

விசுவாசம் மிக்க நாய்

உறங்குபவர்களின்

மண்டைகளைக் குடைந்து

மூளைகளை உறிஞ்சியது.

 

 

 நீண்ட உறக்கத்தின்

 கனவுகளில்

 சாம்பல் நிறம்

 தோன்றவேயில்லை.

 நீலமும் பச்சையும்

 பளிச்சென்ற சிவப்பும்

 கண்ணைப் பறிக்கும் மஞ்சளும் என

 எல்லாமே வண்ண மயம்.

 தேனூறும் பச்சை வயல்களும்

 பாலூறும் ஆறுகளும்

 மங்கையரின் நடனமும்

 குழந்தைகளின் சிரிப்பும் என

 எங்கும் இன்ப மயம்.

  

மறைந்த சூரியனின் இடத்தில்

புதுப் பொலிவுடன்

ஒளி பொழிந்தது

மக்களைச் சுட்டெரிக்காத

ஆறுகளை ஆவியாக்காத 

வட்ட வடிவப்

பெரு விளக்கொன்று.

புயலின் சீற்றமோ

மழையின் வெள்ளமோ

தீண்டாத பேரின்ப வாழ்வு.

 

யுகங்கள் கழிந்த 

பின்னொரு நாளில் 

கட்டுண்ட சூரியன் 

கிழக்கின் கடலுக்கு 

இடம் பெயர்ந்து, வானேறி 

சாம்பல் நிறப் போர்வையின் 

சின்னப்பொத்தல்களின் வழியே 

கதிர்களை நுழைக்க 

முயன்ற பொழுதில் 

மெல்ல உறக்கம் 

கலைந்த மக்களின் பார்வை 

போர்வையைத் தாண்டவேயில்லை.

  

முனை மழுங்கிய 

ஊசிகளைக் கொண்டு 

சாம்பல் நிறப் போர்வையின்

பொத்தல்களைத் தைத்த பின்

உறக்கத்தின் கதகதப்பான

உலகுக்குள் நுழைந்து

விட்ட இடத்திற்கே

விரைந்து சென்று

மீண்டும் கனவுகளைக்

காணத் தொடங்கினார்கள்.

 

September 18, 2020

Drizzling night sky

 

drizzling night sky--

a million translucent stars

fall on the dark tar road

and thaw into silvery liquid

that trickles to the muddy sidewalk.

 

#karkuzhali

18.09.2020

Poetry in translation series

 

What is bliss and where does one find it? Does it follow one or does one go behind it? It is not sold or bought in shops and cannot be mined and minted, but seems to be highly inflammable as the legends have always hinted. 
 
It is evident from this poem that the map to the treasure trove will unravel itself when one falls in love. Here is a romantic poem in Tamil by Karkuzhali Sreedhar:
 
இப்படியும் அப்படியுமென
ஊசலாடும் கடிகார மனம்
நிலைக்கு வந்ததும்
காலப் பரிமாணம்
பிரபஞ்சப் பெருவெளியில்
சலனமின்றிக் கரைகிறது.
நீட்சியும் குறுகலுமில்லாத
காற்றளாவும் தருணம் ஒன்றில்
நீயும் நானுமென்ற மெய்
ஓருயிராகி ஒத்திசைந்து
நேசக்கடலில் நீந்துகிறது.
மரமொன்றின்
சிலிர்க்கும் இலைகளாகத்
துவங்கும் ஆசையின் துடிப்பு
ஆழிப் பேரலையின்
வீச்சாகச் சுழன்றடித்து
வேகம் கூட்டுகிறது.
நிற்காமல் சுழலும்
கிரகங்களுக்கு ஊடாக
நாம் கைகோர்த்து ஆடும்
தட்டா மாலையைக்
கண்சிமிட்டிப் பார்க்கும்
வால் நட்சத்திரமொன்று.
விண்ணெங்கும் சிதறி
வெளிச்சத் துகளாக மின்னும்
பரவசப் பொழுதுகளை
வெண் பஞ்சு மேகத்தில்
வைரமாகப் பொதியலாம்.
பின் அலைகளைக் கிழித்துக்
கடற்படுகையுள் அதைப்
புதைத்து வைத்து
நம் இதயங்களின் துடிப்பைப்
புவியெங்கும் கடத்தலாம்.
விண்ணில் பறந்தும்
மண்ணைக் குடைந்தும்
நேச விதைகளைத்
தூவினோம் என்று
இனி வரும் யுகமொன்றின்
தேர்ந்தெடுத்த கணத்தில்
அந்த அற்புதப் புதையல்
நம் காதலைப்
பறைசாற்றட்டும்.
When the mind
swinging this way and that
like a clock's pendulum
comes to a stop,
the dimension of time
dissolves unperturbed
in the universal space.
At a moment
when the wind speaks
neither elongated
nor shortened,
the bodies
called you and I
become one life
and swim in unison
in the sea of love.
The throb of desire
that begins like
the quivering leaves
of a tree
swirls around
like a tsunami
and accelerates.
A comet
that looks at
our whirling about
hands intertwined
amidst the planets
that revolve non-stop
may scatter all over space
and imbed the shining particles
of blissful instants
as diamonds
in white cotton clouds;
It may tear through
the waves later,
bury in the seabed
and carry our heartbeat
all through the earth.
At a chosen moment
in an ensuing epoch,
let that magnificent treasure
proclaim our love that
we sowed the seeds of affection
by flying in space
and tunnelling the earth.
 
~Sri 1445 :: 23082020 :: Noida
(Translation by Sri N Srivatsa)

About Me

A writer and an eternal optimist